ஜல் சக்தி அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு தேசிய நீர் விருதுகளுக்கான இணை வெற்றியாளர்கள் உட்பட 11 பிரிவுகளை உள்ளடக்கிய மொத்தம் 41 வெற்றியாளர்களை தற்போது அறிவித்தது. இதில் சிறப்பு மாவட்ட பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டம் இரண்டாவது பரிசு பெற்றுள்ளது.

மேலும் சிறந்த கிராம பஞ்சாயத்தை பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் கிராம பஞ்சாயத்து இரண்டாவது பரிசை பெற்றது. சிறந்த தொழில்துறை பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்த அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனம் மூன்றாவது பரிசை பெற்றது