தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். ஏப்ரல் 24, மே ஒன்னு மற்றும் எட்டு ஆகிய தேதிகளிலும் ஜூன் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் காச்சிகுடாவில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு மதுரை வந்தடையும்.மதுரையில் இருந்து இந்த ரயில் ஏப். 19, 26 மற்றும் மே. 3,10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.