குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா என்ற மாவட்டம் பஞ்சோட் கிராமத்தில் தெரு நாய்கள் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தெரு நாய்கள் நலனுக்காக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அதே சமயம் சிலர் தங்கள் நிலத்தை இந்த அறக்கட்டளையில் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள நாய்களின் பெயரில் 10 ஏக்கர் நிலம் உள்ளது என்றும் அதன் மதிப்பு 90 கோடி இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலங்களை கிராம விவசாயிகளுக்கு குத்தகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானம் மூலம் நாய்களுக்கு உணவளிக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.