சென்னை மற்றும் திருப்பதி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவைக்கு ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து தற்போது சென்னையிலிருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சென்னை மற்றும் திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் இடமும் தகவல் வெளியாகி உள்ளது.