தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி  ஊராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது கவனிப்பார். பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிக்காடு  உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆல் பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா கவனிப்பார். ஆழ்வார் திருநகரி பேரூராட்சி சுற்றுவட்டார பகுதிக்கு ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குலசேகரநத்தம், அப்பன் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு கிரண் குராலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.