தூத்துக்குடி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்புரையில் தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் எனவும் மறு மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த ரயில் கூடுதலாக அரியலூரில் இன்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.