உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சிவ்குமாரி ஐஷ்பாக்கில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையி்ல் அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில் தனது இந்த முடிவுக்கு தான் தான் காரணம் என்று குறிப்பிட்டதோடு குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் கூறுகையில் சிவ்குமாரி சுமாராகத்தான் படிப்பார் என்றும் படிப்பால் அவருக்கு ஏற்பட்ட அழுத்தம் தான் அவர் இத்தகைய முடிவை எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.