மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது இது குறித்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. பயிற்சி நிலையத்தில் நாய் ஒன்றைக் கையாளுபவர்கள் தூக்கிலிட்டுள்ளார். நாயின் கழுத்தில் கயிறு கட்டி வாயிலில் உள்ள இரும்பு கேட்டில் தொங்கவிட்டதையடுத்து நாய் 7 நிமிடம் கழித்து உயிரிழந்தது.

சஹாரா காலனியில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் அக்டோபர் 9 ஆம் தேதி இந்த சோகம் நடந்தது. இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.