துலாம் ராசி அன்பர்களே,

இன்று நட்பால் உங்களுக்கு நல்ல காரியம் கண்டிப்பாக நடைபெறக்கூடும். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வரக்கூடும். சூழ்நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு வீச்சில் செயல்படுவீர்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் ஆலோசித்து செய்வது நல்லது. எதிலும் கவனமாக ஈடுபடுங்கள். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

இன்று கடின உழைப்பால் முன்னேற முடியும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கிறது. முன்கோபம் குறையும். உறவோடு  ஏற்பட்ட மனஸ்தாபங்கள்  கண்டிப்பாக நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடி மீண்டும் நட்பு பாராட்ட கூடும். எதிர்பார்த்த பண உதவி கண்டிப்பாக கிடைக்கக்கூடும் .மாற்று கருத்துடையோர் மனம் மாறக்கூடும்.

இறைவழிபாட்டினால் வளர்ச்சி காண்பீர்கள் .சொந்தத் தொழில் தொடங்க போட்ட திட்டம் வெற்றி பெறும். ஆன்மீகப் பயணங்கள் கண்டிப்பாக நன்மையை கொடுக்கும் .திறமையால் இன்று வெற்றி பெற முடியும் .சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். கனவுகள் நனவாகும் இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும்.

பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். அக்கம்  பக்கத்தினரிடம் பேசும்போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்கப் பாருங்கள். இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள் வெற்றி நிச்சயம் .

அதிர்ஷ்டமான திசை  : கிழக்கு

அதிஷ்ட எண்  : மூன்று மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் நீல நிறம்