இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும், மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள்ளும் பூஜை செய்து வழிபடலாம். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். அதே சமயம் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை படைக்கலாம். அவரவர் வழிபடுமிடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம் , பூ, ஊதுபத்தி மற்றும் விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.