துலாம் ராசி அன்பர்களே….

இன்று  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும். நேசித்தவர்களால் நிகழ்கால தேவை பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டிய சூழல் உருவாகும். இன்று மனதிற்குள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனமாக இருக்கவும்.

வீண் ஆசைகளை மனதில் எழவிடாதீர்கள். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது .எந்த ஒரு செயலையும் யோசித்து செய்ய வேண்டும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தையும் கோபத்தையும் தவிர்த்திட பாருங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. எதார்த்தமாக செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விட முடியும். பெண்கள் கனவுகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியும் .பெண்கள் தயவு செய்து முன் கோபம் படாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடக்கூடும். இன்று மாணவர்களுக்கு உற்சாகம் கண்டிப்பாக இருக்கும். காரியங்களில் வெற்றி ஏற்படும் பொறுப்பான பிள்ளை என்று பெயர் எடுப்பீர்கள். அது மட்டும் இல்லை, கல்வியிலும் சாதித்து காட்டுவீர்கள் .உயர்கல்வி உகந்ததாக அமையும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதே போன்று இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் நல்ல முன்னேற்றம் காணப்படும் .

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2, 4 மற்றும் 7

அதிஷ்ட நிறம்:  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.