ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது அனன்யா 14 வயது யுவராஜ் சிங் ஆகிய இருவரும் உறவினர்கள் ஆவார்கள். சிறுவன் சிறுமி இருவரும் பள்ளி முடிந்து சக நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தெரு நாய் ஒன்று இவர்களை துரத்த துவங்கியுள்ளது.

இதனால் இருவரும் பயந்து ஓட துவங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே டிராக்கை கடக்க முயற்சித்த போது சரக்கு ரயில் இருவர் மீதும் மோதியது. இதில் அனன்யா யுவராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். சிறுவனையும் சிறுமியையும் துரத்திய நாய்களை கார்ப்பரேஷன் குழு பிடித்த பிறகு தான் சடலத்தை குடும்பத்தினர் வாங்கிச் சென்றுள்ளனர்.