அயோத்தியில், வரும் திங்கட்கிழமை ஜனவரி 22ஆம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் பிற்பகல் 2.30 மணி வரையும், சில இடங்களில் முழு நாளுமே விடுமுறை என அறிவித்துள்ளது.

புதுச்சேரி உட்பட கோவா, சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டிகர், ஒடிசா, அசாம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா என 15 மாநில அரசுகளும் பொது விடுமுறை அளித்துள்ளது.