பாமக உடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.

தமிழகத்தின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியுள்ளது. ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்தார்.