பாஜக உடன் கூட்டணி முடிவான பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது.

மேலும், 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திராவிட கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி மனநிலை உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவே பாஜகவுடன் கூட்டணி என அன்புமணி தெரிவித்தார்.