தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்காக முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேட்டில் 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவும் https://www.tnstc.in/home.html என்ற இணையதள பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.

ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் சில மணி நேரத்தில் டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளதால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விருப்பமுள்ளவர்கள் தற்போது புக் செய்து பயணத்தை உறுதி செய்து கொள்ளும்படி போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.