மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து, அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.