இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க  ரயில்களும் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். இவ்வாறு சிறப்பு ரயில்களை விட்டால் கூட மக்கள் கூட்டத்திற்கு ஈடு செய்ய முடியாது. இதனால் பலர் தீபாவளிக்கு செல்வதற்கு முன்பெ டிக்கெட்டை  ரிசர்வ் செய்து விடுவது சிறந்தது. ரயில் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

நவம்பர் 9ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை நடைபெற்றது. முன்பதிவு தொடங்கி 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நவம்பர் 10ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது.