சிவாஜி நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் நரம்பு புடைக்க சிவாஜியின் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும் உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள் தான். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த பொன்னுசாமி (91) . தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்