+1 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 10,000 வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி நடக்கும் என கூறப்பட்ட இந்த தேர்வு பின்னர் செப்., 30ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் +1 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம், 1,000 பேருக்கு பட்டப்படிப்பு வரை இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.