சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், பெண் ஒருவர் அவசரத்தில் தனது வீட்டின் கதவைத் திறந்தே வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டில் ஒரு பூனை மட்டுமே தனியாக இருந்த நிலையில், அந்த வழியாக ஆர்டர் டெலிவரி செய்ய வந்த இளைஞர் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்த அவர், திருடர்களோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்தோ நேரிடக் கூடாது என முடிவு செய்தார்.
🚨 गलती से दरवाजा खुला छोड़कर चली गई महिला… घर में अकेली बिल्ली..!😱
कोई भी अंदर घुस सकता था, लेकिन तभी एक लड़का डिलीवरी देने के लिए आया…उसने देखा कि घर में कोई नहीं है
फिर लड़के ने पार्सल अंदर रखा और घर की चौखट पर खड़े होकर पहरा देना शुरू कर दिया।
जब तक मालकिन लौट नहीं… pic.twitter.com/hELIhjNZrX
— Sanjay Gupta 🇮🇳 (@sanjukgupta1987) April 29, 2026
அந்த இளைஞர் பார்சலை உள்ளே வைத்துவிட்டு, வீட்டின் உரிமையாளர் வரும் வரை அங்கிருந்து நகராமல் வாசல் படியிலேயே நின்று காவல் காத்துள்ளார். தனது நேரத்தைப் பொருட்படுத்தாமல், அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் அங்கிருந்த பூனையின் நலன் கருதி அவர் செய்த இந்தச் செயல் பலரது இதயங்களை வென்றுள்ளது. “உலகில் இவரைப் போன்றவர்களே உண்மையான ஹீரோக்கள்” என எக்ஸ் (X) தளத்தில் இந்த வீடியோவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
