திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணையையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை செல்லும் ரயில்கள் பௌர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் போலவே சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில் அங்கிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.