பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார், திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளார். தமிழில் ஆறாது சினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை, திரௌபதி, மண்டேலா, ஜோதி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பரதநாட்டிய கலைஞராக இருந்து கூத்துப்பட்டறை மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது, ‘திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.