கருப்பு எம்ஜிஆரே உங்களிடம் அடிவாங்க காத்திருக்கிறேன் என விஜயகாந்த் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே!

பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.