கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாமலைவாசன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் என்ற டிரைவராக இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாமா அபிநயா(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு மூக்கில் ரத்த காயங்களுடன் அபிநயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிநயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அபிநயாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.