கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 6 ஆயிரத்து 553 இடைநிலை ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 587 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடத்துகிறது. அந்த தேர்வாளர்கள் பயனடையும் வகையில் நாளை முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055908 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் இருப்பவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு ஆகியவற்றுடன் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.