தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. எனவே பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் வைத்து வெடித்தனர். அப்போது தீப்பொறி விழுந்து வாகனத்தில் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் பட்டாசு வெடித்ததால் விஜயகுமார்(21), யாஷிகா(6), பரசுராமன்(20), பிரதிக்ஷா(7), தர்ஷன்(6) ஆகிய ஐந்து பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.