தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் இளம் புதுமண தம்பதிகள் ஆன கார்த்திகா மற்றும் மாரி செல்வத்தை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி மற்றும் புறநகர் டிஎஸ்பி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் ஆட்களை வைத்து இருவரும் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூத்த மகளான கார்த்திகா பொருளாதாரத்தில் பின்தங்கிய மாறி செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் தந்தை ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.