தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 39 வது பிறந்தநாள் ஆனது கடந்த ஐந்தாம் தேதி கொண்டாடப்பட்டது. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தென்பசியார்  பகுதியில் பாஜக சார்பாக 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் அண்ணாமலை கலந்து கொண்டு அவர்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் இந்த இலவச திருமணத்தில் பங்கேற்ற 39 தம்பதியரில் மூன்று பேர் ஏற்கனவே திருமணமானவர்கள் என்றும் அதில் ஒரு தம்பதியரின் குழந்தைக்கு நேற்று முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலையையும், பாஜகவினரையும் திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .அது மட்டும் இன்றி இது தொடர்பாக பல மீம்களும் பரவி வருகிறது.