பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் புது மணப்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த நிஷா குமாரி என்ற அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கூடுதல் வரதட்சணை கேட்டு முகேஷ் அப்பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு மனைவியை தாக்கி கொன்றுள்ளார். பெண்ணின் பெற்றோர் மணமகன் வீட்டின் முன் உடலை தகனம் செய்ய முயன்றனர், ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.