டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 20 வயது மாணவியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த மாணவி தற்போது 29 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கருவை கலைக்க வேண்டும் என மாணவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், உயிர் சம்பந்தமான பிரச்சனை என்பதால் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு 29 வார கருவை கலைப்பது சாத்தியமா என்று எய்ம்ஸ் மருத்துவமனையிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் 29 வார கருவை கலைப்பது சாத்தியமா என்று எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் கொடுத்த பிறகு வருகிற 23-ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.