திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்  ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30 நாட்கள் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் பக்தர்கள் ஒரு மாத காலம் குளத்தில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கோவில் திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த மாதம் இறுதியில் பணிகள் முடிவடைந்த பிறகு குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.