ஜெய்ப்பூரில் இருந்து வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங் திடீரென பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மூன்று பயணிகள் மற்றும் ஆர்பிஎப் அதிகாரி ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்பிஎப்-ஐ சேர்ந்த டிக்காராம் மீனா பணியிலிருந்து ஓய்வு பெற 9 மாதங்கள் இருந்த நிலையில் சக ஆர்பிஎப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது இழப்பிற்கு நஷ்ட ஈடாக 15 லட்சம் ரூபாய் கொடுக்க இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.