உத்தர் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் பகுதியில் இளைஞர் ஒருவர் திருடியதாக சந்தேகிக்கப்பட்டு கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை தலைகீழாக தொங்க விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் இது தொடர்புடைய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.