தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பல மக்கள் தவித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்க இருப்பதாக அறிவித்து வெளியாகி உள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் திண்டிவனம், விழுப்புரம் வழியாக மாலை 6.30 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.