தமிழகத்தில் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் செல்போனுடன் வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பி செல்கின்றனர். செல்போனை வாக்கு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் வாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இனி வாக்களிக்க செல்வோர் செல்போனை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.