தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை இடம், கோவையில் Gpay மூலமாக பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய அவர், இந்த தேர்தலை நான் நேர்மையாக சந்தித்து இருக்கிறேன். கோவை தொகுதியில் உள்ள ஒரு வாக்காளர் நான் பணம் கொடுத்தேன் என நிரூபித்தால் அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன். தர்மத்திற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன். திமுகவிற்கு எதிராக வேள்வி நடத்த வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.