பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா(89) உடல் நலக்குறைவால் காலமானார். தொடுவானம், படி தாண்டிய பத்தினிகள், அவசரக் கோலங்கள், மனவிலக்கு , பெண்களின் சிந்தனைக்கு போன்ற 30க்கும் மேற்பட்ட நாவல்களும் அம்மாவின் சொத்து மற்றும் வெகுளி பெண் போன்ற பல சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.