திண்டிவனம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், தமிழகத்தின் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காசேதான் கடவுளடா, அது கடவுளுக்கே தெரியுமடா. அது கடவுளுக்கே தெரியும் என்றார். தேர்தல் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, எனக்கு வந்த தகவல் படி நியாயமாக நடைபெறுகிறது எனக் கூறினார்.