மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அப்போது பேசிய அவர், திருச்சி என்றாலே திமுகதான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான் திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை என்று விமர்சித்துள்ளார்.