சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட திமுக முறையாக நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் வெறும் 100 மணி நேரம் கூட அவர்களால் சபையை நடத்த முடியவில்லை. எதையும் செய்ய முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளதாக கூறிய இபிஎஸ் மக்கள் தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.