தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. அதனைப் போலவே பாமாயில் போல ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயையும் விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தேங்காய் எண்ணெய் விற்பனை திட்டம் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளித்துள்ளார்.