அதிமுகவில் இருந்து பெண் கவுன்சிலர் ஒருவர் விலகி திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து அடுத்தடுத்த விலகி அதிமுகவில் இணைந்து வருவது அரசியலில் பரபரப்பு கிளப்பி உள்ள நிலையில் தற்போது வேலூர் மாநகராட்சி 45 வது வார்டு அதிமுக பெண் கவுன்சிலர் அஸ்மிதா கட்சியில் இருந்து விலகி அமைச்சர் எ. வ. வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.