ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு தான். ஈ.வி.கே.எஸ்.சம்பத் மகனுக்கு சம்பத் நகரில் வாக்கு சேகரித்து வந்துள்ளேன். கலைஞர் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என பேசி உள்ளார்.