நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.