பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன் தெரிவித்துள்ளது.