லியோ திரைப்படத்தை அடுத்து விஜய்யின் தளபதி-68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க 20 வருடங்களுக்கு பின் விஜய் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனிடையே தன் திரை வாழ்க்கையில் விஜய் வாங்காத ரூ. 200 கோடி சம்பளத்தை இப்படத்திற்காக வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் தளபதி-68 படத்தின் கதை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படம் அப்பா மகனின் ஈகோவிற்கு இடையே நடக்கும் கதை என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படத்திலும் அப்பா-மகன் சென்ட்டிமெண்ட் இருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற கதையை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.