நாம யார் மனசையும் புண்படுத்த வேண்டாம், நமக்கு நிறைய வேலை இருக்கு என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ‘லியோ’ திரைப்பட வெற்றி விழாவில் பேசிய அவர், ‘அப்பா திட்டினால் யாரிடம் போய் அழ முடியும், விட்றனும்; இவ்வளவு கோவம் உடம்புக்கு நல்லதல்ல. நாம யார் மனசையும் புண்படுத்த வேண்டாம்.

‘மக்கள் திலகம்’னா ஒருத்தர்தான், ‘புரட்சி கலைஞர்’னா ஒருத்தர்தான், ‘உலகநாயகன்’னா ஒருத்தர்தான், ‘சூப்பர் ஸ்டார்’னா ஒருத்தர்தான், ‘தல’ன்னா அது ஒருத்தர்தான், அப்படி ‘தளபதி’னா என்னனு உங்களுக்கு தெரியும், உங்களுக்கு கீழ வேலை செய்ற தளபதி நான்’ என கூறினார்.