மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.