மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், தமமுக தலைவர் ஜான்பாண்டியனும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றனர். பாஜக ஆதரவாளரான கிருஷ்ணசாமி இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ஜான்பாண்டியன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றனர். ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் தென்காசி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது